
திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைய உள்ளன. இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் திருச்சி அணியிடம் தூத்துக்குடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பை சிக்கலாக்கி கொண்டது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. காரைக்குடி மற்றும் மதுரையைத் தவிர மற்ற அணிகள் 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. மேலும் ஒரு ஆட்டங்களே இந்த அணிகளுக்கு உள்ளன.

இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், ஜோன்ஸ்ட் டூடி பாட்ரியாட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராஜகோபால் 41, எஸ். அபிஷேக் 30, ஆனந்த் சுப்பிரமணியம் 23 ரன்கள் எடுத்தனர்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை/முடிவுகள்
அடுத்து விளையாடிய திருச்சி அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பரத் சங்கர் 51, மணிபாரதி 26 ரன்கள் எடுத்தனர். பாபா இந்திரஜித் ஆட்டமிழக்காமல் 50, கணபதி சந்திரசேகர் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இதையடுத்து இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 3 வெற்றிகளுடன் இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் உள்ளன.
கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!
காரைக்குடி, திண்டுக்கல், மதுரை தலா 8 புள்ளிகளுடனும், கோவை 6 புள்ளிகளுடனும் முதல் நான்கு இடத்தில் உள்ளன. முன்னாள் சாம்பியனான தூத்துக்குடி இந்த சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் காரைக்குடியை சந்திக்க உள்ளது. அதில் வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைப்பதற்கு சாத்தியம் உள்ளது.