
அரிதான வாய்ப்பு
இம்முறை கூட சிஎஸ்கே அணிக்காக சொதப்பினாலும், இறுதி கட்டங்களில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். இந்த நிலையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் தென்னாப்பிரிக்க தொடரில் இல்லாத நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கும், இஷான் கிஷனுக்கும் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்பட்டது.

வீணடித்த ருத்துராஜ்
இதில் இஷான் கிஷன் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, 76, 34, 54, 27, 15 என 5 போட்டிகளில் 2 முறை அரைசதம் அடித்து, நடப்பு தொடரில் அதிக (206) ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், அவரை விட திறமையான வீரராக கருதப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் 5 போட்டிகளில் 23, 1, 57, 5, 10 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த 5 இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 96 ரன்கள் மட்டுமே ருத்துராஜ் சேர்த்துள்ளார்.
Recommended Video

ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு
இதன் மூலம் தொடக்க வீரருக்கான மாற்று என்ற போட்டி வந்தால், அதில் இஷான் கிஷன் தான் முதலில் இருப்பார். இதனால், இனி அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டியில் ருத்துராஜ் கெய்வாட்க்கு பதிலாக ராகுல் திரிபாதிக்கு தான் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ருத்துராஜின் இந்த ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் தான் கடுப்பாகி உள்ளனர்.

சொதப்பலுக்கு காரணம்
சிஎஸ்கே அணியின் எதிர்காலமாகவும், இந்திய அணியின் எதிர்காலமாகவும் ருத்துராஜை ரசிகர்கள் கருதினர்.ருத்துராஜ்க்கு 2022ஆம் ஆண்டு சரியாக அமையவில்லை. முதலில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை, பிறகு கொரோனா, மற்றும் காயம் என ருத்துராஜ் கெய்க்வாட் பல சவால்களை இந்த ஆண்டு சந்தித்துள்ளார். இதனால் தான் ருத்துராஜ் சொதப்புவதாகவும், மீண்டும் அவர் பழைய ஃபார்ம்க்கு திரும்புவார் என்று அவருடைய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











