சென்னை வந்த இந்திய, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி
சென்னை: நான்காவது ஒருநாள் போட்டிக்காக, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் நடுவேயான, 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் 18ம் தேதி நடந்தது. அங்கிருந்து கிளம்பிய இரு அணி வீரர்களும் நேற்று சென்னை விமானநிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதையொட்டி இன்று மாலை முதல், இரு அணி வீரர்களும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
Story first published: Tuesday, October 20, 2015, 15:14 [IST]
Other articles published on Oct 20, 2015


Click it and Unblock the Notifications