
கடல் தாண்டிய புகழ்
ஐபிஎல் ஏலத்தில் கூட காவ்யா மாறன் படு சிறப்பாக செயல்படுவார். எந்த அளவுக்கு அழகு இருக்கிறதோ, அதே அளவிற்கு அறிவையும் பயன்படுத்தி ஏலத்தில் மற்ற அணிகளுக்கு ஆட்டம் காட்டியவர் காவ்யா மாறன். இந்த நிலையில், காவ்யா மாறனின் புகழ் கடல் தாண்டி தென்னாப்பிரிக்க வரை சென்றது.

சன்ரைசர்ஸ் புதிய அணி
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ் ஏ 20 தொடரில் சன்ரைசர்ஸ் அணி ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கி உள்ளது. இந்த நிலையில் பார்ல் ராயல்ஸ் அணியுடன் போலாந்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீசியது.

காதலுக்கு வேண்டுகோள்
அப்போது ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யும் போது 8 ஓவர் முடிவில் 60 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த போது தான், கூட்டத்தில் இருந்த வெளிநாட்டு ரசிகர் ஒருவர், காவ்யா மாறனுக்கு கல்யண புரோபஷலை கொடுத்துள்ளார். அதில் காவ்யா மாறன் தம்மை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற பதாகையை வைத்த படி அந்த இளைஞர் தனது காதலுக்காக கடல் தாண்டி தூது விட்டார்.
வெற்றிநடை போடும் காவ்யா
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் சக்கை போடு போடுகிறது. ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து சன்ரைசர்ஸ் அணி 18.2வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3வது வெற்றியை காவ்யா மாறன் படை பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











