குவாபெர்ஹா: தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முடிவு 5வது நாளுக்கு சென்றிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் - தனஞ்செயா டி சில்வா இருவரின் அபார ஆட்டத்தால், தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 358 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி நிசாங்கா மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களின் அபார ஆட்டத்தால் 328 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
