குவாபெர்ஹா: இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய நட்சத்திர வீரர் ரிக்கல்டன் 250 பந்துகளை எதிர்கொண்டு 101 ரன்கள் எடுத்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்ற நிலையில், இன்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் வென்றாலே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தகுதிபெற முடியும்.
