For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் கண்டிப்பா வேண்டும்.. காரணத்துடன் ஆதரவு கொடுத்த சாபா கரீம்.. அட இதுவும் சரிதானே!

மும்பை: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் ரிஷப் பண்ட்-க்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் சூழலில் முன்னாள் வீரர் சாபா கரீம் மட்டும் ஆதரவுக்குரல் நீட்டியுள்ளார்

நியூசிலாந்துடனான தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

நியூசிலாந்து தொடரில் தவான் தலைமையில் இளம் படை விளையாடிய சூழலில், வங்கதேச தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி, போன்ற சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்குள் வருகின்றனர்.

வங்கதேச சுற்றுப்பயணம்

வங்கதேச சுற்றுப்பயணம்

இந்த தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருப்பது தான் தற்போது ரசிகர்களின் அதிருப்திக்கு காரணமாக உள்ளது. சஞ்சு சாம்சன் போன்று நல்ல ஃபார்மில் உள்ள வீரருக்கு வாய்ப்பு தராமல் பண்ட்-க்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் நியூசிலாந்து தொடரில் பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மறுபுறம் நன்றாக விளையாடிய சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சாபா கரீம் பேச்சு

சாபா கரீம் பேச்சு

இந்நிலையில் ரிஷப் பண்ட்-க்கு ஆதரவாக முன்னாள் வீரர் சாபா கரீம் பேசியுள்ளார். அதில், நானாக இருந்தாலும் பண்ட்-க்கு தான் வாய்ப்பு தந்திருப்பேன். ஏனென்றால் வங்கதேச தொடரில் அவர் எப்படி தான் விளையாடுகிறார் என்பதை நான் தெளிவாக பார்க்க வேண்டும். அவருக்கென நிலையாக 5வது இடத்தை உறுதி செய்து விளையாட வையுங்கள். ஒருவேளை சொதப்பிவிட்டால் வேறு மாற்று வீரர்களுக்கு செல்லலாம். அது சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என சாபா கரீம் கூறியுள்ளார்.

கடைசி வாய்ப்பா?

கடைசி வாய்ப்பா?

சேட்டன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வுக்குழு நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே தேர்வு செய்து வைத்து விட்டு சென்றது தான் வங்கதேசத்திற்கு எதிரான இந்திய படை. எனவே இந்த 3 போட்டிகள் தான் பண்ட்-க்கு கடைசி வாய்ப்பு எனத்தெரிகிறது. புதிதாக வரப்போகும் தேர்வுக்குழு ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு தருவார்களா? என்பது சந்தேகமான ஒன்று தான்.

ரோகித் முன் உள்ள சவால்

ரோகித் முன் உள்ள சவால்

ரோகித் சர்மா குறித்தும் சாபா கரீம் முக்கிய அட்வைஸ் கூறியுள்ளார். அதில், ரோகித் சர்மாவுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய சவாலே அவரின் பேட்டிங் தான். அவர் சிறப்பாக விளையாட தொடங்கினால், கேப்டன்சியில் தானாக முன்னேற்றம் தெரியும். ஒரு கேப்டனுக்கு ரன் குவிப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவதாக சாபா கரீம் விளக்கியுள்ளார்.

Story first published: Friday, December 2, 2022, 11:24 [IST]
Other articles published on Dec 2, 2022
English summary
Former Indian Cricketer Saba karim gives a support for Rishabh pant in India vs bangladesh ODI series 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+