தீவிர சச்சின் ரசிகர்
கிரிக்கெட்டா உனக்கு சோறு போடுது என்று நம் பெற்றோர்கள் நம்மை திட்டி இருப்பார்கள். அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த திட்டை வாங்கி இருப்பார்கள். இதற்கு சுதிர் குமார் மட்டும் விதி விலக்கா என்ன? சச்சினின் அதி தீவிர ரசிகரான இவர், தொடக்கத்தில் நண்பர்களிடம் கடனை வாங்கியாவது கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றுவிடுவார்.
போட்டோ எடுக்க கட்டணம்
சில சமயம், காசு இல்லை என்றால் நடந்தோ, இல்லை யாரிடமாவது லிப்ட் கேட்டோ, மைதானத்துக்கு சென்று விடுவார். தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஒரே மாதிரி தோற்றத்துடன் வந்ததை அடுத்து கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் பரிட்சையம் ஆனார். மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள், இவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் காசு கொடுக்க வேண்டும். இப்படி தான் வாழ்க்கையை ஓட்டினார்.
சச்சின் செய்த உதவி
சுதிர் குமார் சௌத்ரியின் அன்பை பார்த்த சச்சின் டெண்டுல்கரே, அவருக்கான டிக்கெட் செலவு மற்றும் போக்குவரத்து செலவை ஏற்று கொண்டார். பின்னர் அவரின் குடும்பத்துக்கும் உதவித் தொகையும் சச்சின் வழங்குகிறார். சச்சின் ஓய்வு பெற்ற பிறகும் அணி நிர்வாகமே இவருக்கான டிக்கெட்டை வழங்கி விடுகிறது. வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று அங்குள்ள வீரர்களிடம் பேசும் அளவுக்கு இந்திய அணியில் செல்லப் பிள்ளையாக மாறினார் சுதிர்குமார் சௌத்ரி.
தோனியுடன் சந்திப்பு
இந்த நிலையில், சுதிர்குமார் சௌத்ரி, தோனியின் வீட்டிற்கு சென்று, அவருடனும், அவரது குடும்பத்தினருடனும் இணைந்து வெல்பி எடுத்து கொண்டுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆண்டுதோறும் தோனியின் வீட்டிற்க சென்று அவரை சந்திப்பேன் என்றும், கொரோனா அச்சுறுத்தலால் சில ஆண்டாக செல்ல முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.