
கவாஸ்கர் பேருவகை
கவாஸ்கர் கூறுகையில், விராத் கோஹ்லியின் சகாப்தம் தொடங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். அவர் டெஸ்ட் கேப்டனாக என்று உருவெடுத்தாரோ அன்றே அது தொடங்கி விட்டது. இப்போது இன்னும் அது வேகம் பிடித்துள்ளது. அடுத்த சச்சினாக உருவெடுத்துள்ளார் கோஹ்லி என்றார்.

ஷேவாக் சந்தோஷம்
வீரேந்திர ஷேவாக் கூறுகையில், கோஹ்லிதான் அடுத்த சச்சின் டெண்டுல்கர். அதில் சந்தேகமே தேவையில்லை. கவாஸ்கர் காலத்தில் உருவானார் சச்சின். சச்சின் காலத்தில் நான் வளர்ந்தேன். இப்போது கோஹ்லியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன் என்றார் ஷேவாக்.

100 சதவீத உழைப்பு
கவாஸ்கர் மேலும் கூறுகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 100 சதவீதத்திற்கும் மேலான உழைப்பைக் கொடுத்துள்ளார் கோஹ்லி. கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

எவ்வளவு நிதானம்
இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் எவ்வளவு நிதானமாக ஆடினார் கோஹ்லி. யாராலும் இது முடியாது. மிகப் பெரிய மேதையாக மாறியுள்ளார் கோஹ்லி. யாரையும் இப்படி ஆடி நான் பார்த்ததில்லை என்றார் கவாஸ்கர்.
வாவ்.. சச்சின் பாராட்டு
விராத் கோஹ்லி பெரிதும் மதிக்கும் வீரர் சச்சின்தான். அவரே கோஹ்லியின் ஆட்டத்தைப் பார்த்து நேற்று மிரண்டு விட்டார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில் "வாவ்.... கோஹ்லி.. சிறப்பானது இது.. மாபெரும் வெற்றி.. மிகப் பெரிய போராட்டம்.. என்று பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications