லாலி, ஹரியானா: தனது கடைசி ரஞ்சிப் போட்டியை ஆடும் சச்சின் டெண்டுல்கர், இன்று முதல் இன்னிங்ஸில் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மும்பை ஹரியானா இடையிலான ரஞ்சிப் போட்டி இன்று தொடங்கியது. இதுதான் சச்சின் விளையாடும் கடைசி ரஞ்சிப் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார் சச்சின்.

முதலில் ஹரியானா பேட்டிங் செய்தது. ஆனஆல் 134 ரன்களில் அவர்கள் சுருண்டு போனார்கள். இதையடுத்து மும்பை பேட் செய்தது. சச்சின் பிரமாதமாக ஆடுவார் என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் 4வதாக களம் இறங்கிய சச்சின் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். வெறும் 7 பந்துகளை மட்டுமே சச்சின் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.