
முதல் இன்னிங்ஸ்
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் விராட் கோலி எனக்கூறலாம். ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா (83) மற்றும் சுப்மன் கில் (70 ) நல்ல அடிதளத்தை அமைக்க, கோலி அதை எந்தவித குறையும் இன்றி எடுத்துச்சென்றார். 87 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் என 113 ரன்களை குவித்தார். இதனால் சீரான வேகத்தில் இந்தியா 373 ரன்களை தொட்டது.

விராட் கோலி சாதனை
இந்த சதத்தின் மூலம் கோலி புதிய சாதனையை படைத்தார். அதாவது இலங்கை அணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவராக சச்சின் (8) இருந்தார். தற்போது கோலி 9 சதம் அடித்து முந்திவிட்டார். இதே போல சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் சச்சின் இருவருமே தலா 20 சதங்களுடன் சமநிலையில் உள்ளனர்.

சச்சின் பாராட்டு
இந்நிலையில் இதுகுறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை உங்களிடம் தொடர வேண்டும். இந்தியாவின் பெயரை மிக உயரத்திற்கு கொண்டு சென்றுக்கொண்டே இருங்கள். இதே போல டாப் ஆர்டரிலும் மிக நேர்த்தியான செயல்பாடுகளை செய்துள்ளதாக சச்சின் கூறியுள்ளார். கோலியின் முன்னுதாரணமாக உள்ள சச்சின் இப்படி பாராட்டியிருப்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

உலக சாதனை
சச்சினின் மற்றொரு சாதனைக்கு அருகில் விராட் கோலி சென்றுவிட்டார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை அடித்திருக்கிறார். விராட் கோலி தற்போது 45 சதங்களை அடித்துள்ளார். இன்னும் 5 சதங்களை அடித்துவிட்டால், சச்சினை முந்தி விராட் கோலி உலக சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications