“சாய் சுதர்சன் இனி இந்திய அணியை விட்டு விலகி இருக்கணும்”.. முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேச்சு
கொழும்பு: இலங்கை டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி அசத்தியுள்ள தேவ்தத் படிக்கல், இந்திய டெஸ்ட் அணியின் 3 வது பேட்டிங் வரிசையை பிடித்து விட்டார் என்றும், இதனால் சாய் சுதர்சன் அணியில் இருந்து விலகி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாய் சுதர்சன் இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், ஏற்கனவே மாற்று வீரராக அணியில் இடம் பெற்று இருந்த தேவ்தத் படிக்கல் காலியாக இருந்த 3 வது பேட்டிங் வரிசையில் களம் இறங்கினார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 167 ரன்களும், கொழும்பில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் 117 ரன்களும் குவித்து அசத்தினார்.

இது குறித்துத் தனது யூடியூப் பக்கத்தில் பேசிய முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, "தேவ்தத் படிக்கல் ஒரு மிகச் சிறந்த வீரர். அவர் தனது 4 போட்டிகளில், சாய் சுதர்சன் 7 டெஸ்ட் போட்டிகளில் எடுத்த ரன்களை விட அதிகமாகக் குவித்து முந்தியுள்ளார். தொடர்ந்து இரண்டு சதங்களை அடித்து அசத்தியுள்ள படிக்கலின் இந்த ஃபார்ம் காரணமாக, சாய் சுதர்சன் அணியில் இருந்து விலகி இருக்க வேண்டியது தற்போது உறுதியாகியுள்ளது. அவருக்கு அணியில் எளிதாக இடம் கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார்.
தேவ்தத் படிக்கல் 6 இன்னிங்ஸ்களில் 418 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் சாய் சுதர்சன் 12 இன்னிங்ஸ்களில் 383 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தற்போதைய தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 328 ரன்கள் எடுத்துள்ள படிக்கல் தான் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் படிக்கல், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் இரண்டிலும் தம்மால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளார். ஆர்சிபி அணியில் விளையாடிய போது விராட் கோலியை விட அதிரடியாக விளையாடி ரன் குவித்தவர். கோலி 125 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய போது, படிக்கல் 200 ஸ்டிரைக் ரேட்டில் விளாசி மற்றவர்களின் பணியை எளிதாக்கினார்.
கர்நாடக அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் ரன்களை வாரிக் குவித்த படிக்கல், கடந்த 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதிலும் முக்கியப் பங்கு வகித்தார். வரும் 2026 நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் படிக்கல், சாய் சுதர்சன் ஆகிய இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விவாதம் இப்போதே தொடங்கி விட்டது.


Click it and Unblock the Notifications
