பூரி: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியதற்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்பம் ஒன்றை அமைத்து அதன் மூலம் தனக்கே உரிய பாணியில் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து கூறியுள்ளார்.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி நடப்புச் சாம்பியனான பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற மணற் சிற்பக்கலைஞர் சுதர்சன் வாழ்த்து கூறியுள்ளார். கிரிக்கெட் பேட்டும், பந்தும் கடற்கரை மணலில் வரைந்து வாழ்த்து கூறியுள்ளார்.