
டெல்லி : டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எந்த போராட்டமும் இன்றி, சொற்ப ரன்கள் மட்டுமே அடித்து சரணாகதி அடைந்தது.
இதைக் கண்டு கோபமடைந்த இந்திய முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தொடர்ந்து இந்திய அணியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் தேர்வாளராக இருந்தவருமான சந்திப் பாட்டில் ரவி சாஸ்திரி மற்றும் கோஹ்லியின் தவறான அணுகுமுறை தான் இந்த தோல்விக்கு காரணம் என கூறியுள்ளார்.
