நாலாவது சதம்
உலக கோப்பை தொடரில் அவர், பதிவு செய்யும் தொடர்ச்சியான 4வது சதம் இதுவாகும். முன்னதாக, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக, சங்ககாரா சதம் அடித்திருந்தார்.
முதல் வீரர்
இன்றைய போட்டியில் அவர் பதிவு செய்த சதத்தின்மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
முச்சத சாதனையாளர்கள்
முன்னதாக, நியூசிலாந்தின் ரோஸ் டைலர், தென் ஆப்பிரிக்காவின், ஹர்ஷல் கிப்ஸ், டிவில்லியர்ஸ், டி காக், பாகிஸ்தானின் சையது அன்வர், ஜாகீர் அப்பாஸ் ஆகியோர், தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அந்த முச்சத சாதனையை சமன் செய்த சங்ககாரா, தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார்.
சச்சினுக்கு மேலே
சச்சின் அடுத்தடுத்து 2 சதங்கள் விளாசியுள்ளாரே தவிர, ஹாட்ரிக் சதம் இதுவரை அடித்ததில்லை. அந்த வகையில் சச்சினைவிட இரு மடங்கு பாய்ந்துள்ளார் சங்ககாரா.
வரலாற்றில் முதல் முறை
இதுவரை 3 ஆயிரத்து 631 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. அதில் நிகழாத ஒரு சாதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.