For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்..2வது ரேங்கில் இருந்த பாண்டிங்கை முந்தினார் சங்ககாரா!

By Veera Kumar

கிறைஸ்ட்சர்ச்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகர ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை கைப்பற்றியுள்ளார் இலங்கையின் குமார் சங்ககாரா.

உலக கோப்பையின் முதல் போட்டியில் இன்று நியூசிலாந்தும்-இலங்கையும் மோதின. முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்து 331 ரன்களை குவித்த நிலையில், இரண்டாவது இலங்கை பேட்டிங் செய்தது. ஒருநாள் போட்டிகளில் 13 ஆயிரத்து 693 ரன்கள் குவித்திருந்த சங்ககாராவுக்கு, பாண்டிங்கின் ரன் சாதனையை முறியடிக்க மேற்கொண்டு 12 ரன்கள் தேவைப்பட்டது. ஏனெனில் பாண்டிங் ஓய்வு பெறும் முன்பாக மொத்தம் 13,704 ரன்களை குவித்திருந்தார்.

Sangakkara passes Ponting on ODI run list

இனிடையே, 16வது ஓவரில் ஆடம் மில்னே பந்தை பவுண்டரிக்கு விரட்டியபோது அந்த சாதனையை சங்ககாரா நிகழ்த்தினார். இதன் மூலம் சச்சினுக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை சங்ககாரா நிகழ்த்தியுள்ளார். சச்சின் 18 ஆயிரத்து 426 ரன்களுடன் யாரும் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நம்பர்-1 இடத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் சங்ககாரா 39 ரன்களில் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 14, 2015, 14:49 [IST]
Other articles published on Feb 14, 2015
English summary
Sri Lanka’s Kumar Sangakkara on Saturday became the second highest run-maker in one-day international history during the World Cup clash against New Zealand in Christchurch.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+