
லண்டன் : இந்திய அணி கோஹ்லியை சார்ந்தே இருக்கிறது என கூறுவது சரியல்ல, மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடும் திறன் பெற்றவர்களே என கூறி இருக்கிறார், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா.
அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “விராட் பேட்டிங் செய்வதை பார்ப்பது அற்புதமானது. அவர் சிறந்த ஆட்டக்காரர். அதே சமயம். மற்றவர்களும் அருமையான வீரர்களே. புஜாரா, ரஹானே அருமையான பேட்ஸ்மேன்கள். புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 50க்கும் அதிகமாக ஆவரேஜ் வைத்துள்ளார். ரஹானே வெளிநாடுகளில் 50க்கும் மேல் ஆவரேஜ் வைத்துள்ளார். கேஎல் ராகுல் புத்திசாலித்தனமான ஆட்டக்காரர். முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் முக்கியத்துவம் அற்றவர்கள் என கூறி விட முடியாது” என கூறினார்.
