லண்டன்: இந்தியாவிடம் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதற்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தான் காரணம் என பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. குறிப்பாக, நட்சத்திர வீரரும், பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவருமான சோயப் மாலிக், முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதை கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம்... போட்டிக்கு முதல் நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் சிலருடன் சானியா மிர்சா லண்டனில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளனர். அங்கு பாக்கிஸ்தான் அணி வீரர்கள் போதை வஸ்துகளை பயன் படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வை அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது.
போட்டிக்கு முதல் நாள் இரவு ஓய்வெடுக்காமல் விருந்தில் பங்கேற்றால், அசதி காரணமாக அடுத்த நாள் சிறப்பாக ஆட முடியாது என்று முன்பே உங்களுக்கு தெரியாதா? சோயப் மாலிக் டக் அவுட் ஆக நீங்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், தமது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.