
முதல் முறையாக தோல்வி
இந்திய அணி தரப்பில் விராட் கோலியை தவிர்த்து வேறு யாரும் பெரியளவில் சோபிக்கவில்லை. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதே இல்லை என்ற சாதனை இருந்து வந்தது. ஆனால் இந்த வெற்றியின் மூலம் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் படு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சுவாரஸ்ய நிகழ்வுகள்
இந்திய அணி தோல்வியடைந்த போதும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியது. அதாவது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கோலி கட்டியணைத்து பாராட்டினார். இதே போல பாகிஸ்தானின் இளம் வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி களத்தில் அறிவுரை கூறினார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Recommended Video

பாகிஸ்தான் வீரருடன் உறவுமுறை
இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் பவுண்டரி கோடுக்கு அருகே ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இந்திய ரசிகர்கள் அவரை "மச்சான்" என்று உறவு முறையுடன் அழைத்தனர். அதாவது பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தான் கரம் பிடித்துள்ளார். எனவே அவருடன் உறவுமுறை கொண்டாடும் விதமாக அப்படி அழைத்துள்ளனர்.
சானியாவின் பதில்
இதுகுறித்த 9 விநாடிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதில் கொடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் 2 இதய எமோஜிகள் மற்றும் 2 சிரித்தபடியான எமோஜிக்களை பறக்கவிட்டுள்ளார். சோயிப் மாலிக் 2010 ஆம் ஆண்டு இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை மணந்தார். இது விளையாட்டு உலகில் மிகவும் பிரபலமான திருமணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த புகழ்பெற்ற தம்பதியருக்கு இஷான் மிர்சா மாலிக் என்ற மகனும் உள்ளார்.


Click it and Unblock the Notifications