பதவி முடிவு
இந்தியாவுடன் 5 ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராக இருந்த பங்கரின் பதவி, முடிவுக்கு வந்துவிட்டது. அவருடைய பதவிக்காலம், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிந்தது. இதற்கிடையே, அவர் தேர்வுக்குழுவினரிடம் சண்டை போட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை கூட்டி இருக்கிறது.
புறக்கணிப்பு தகவல்
அதாவது, தேர்வுக்குழுவில் இருந்து பங்கர், புறக்கணிப்பட்டதற்காக தேர்வுக்குழு அதிகாரிகளில் ஒருவரான தேவாங் காந்தி காரணம் என்ற தகவல் உலா வருகிறது. அதன் எதிரொலியாக சஞ்சய் பங்கர், 15 நாட்களுக்கு முன்பு, சண்டையிட்டதாக தெரிகிறது.
ஆத்திரத்தில் சண்டை
இது தொடர்பாக வெளியான தகவல்கள் வருமாறு: தேவாங் காந்தி தங்கியிருந்த அறைக்கு சஞ்சய் பங்கர் கடுமையான ஆத்திரத்துடன் வந்திருக்கிறார். இந்திய அணி என்னை தான் நம்பியிருக்கிறது, இல்லை என்றால அணி அப்படியே காலியாகி விடும் என்றும் சத்தம் போட்டதாக தெரிகிறது.
வாக்குவாதம்
அணியில் என்னை நீக்கியது அவசியம் இல்லாத நடவடிக்கை, பொறுப்பில் இருந்து நீக்கினால் கூட, தேசிய கிரிக்கெட் அகாடமியில் தமக்கு ஒரு பொறுப்பு வழங்கி யிருக்கலாம் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
நடவடிக்கை பாய்கிறது
சஞ்சய் பங்கரின் இந்த தரக்குறைவான விமர்சனம், மோசமான நடத்தை பிசிசிஐக்கு கடும் நெருக்கடியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் செயல் பாடுகளை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, வினோத் ராயின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிகிறது.
தோனி சர்ச்சை
முன்னதாக பங்கர் மீது ஏற்கனவே ஒரு சர்ச்சை நிலுவையில் இருக்கிறது. அதாவது நியூசிலாந்துடனான அரையிறுதியில், தோனியை மாற்றி களம் இறக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் அதை மாற்றி சொல்லி, பிசிசிஐக்கு நெருக்கடியை கொடுத்தவர் என்ற பேச்சு இருக்கிறது.