கொல்கத்தா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்துவருகிறது. தற்போது அங்கு பெய்யும் மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது.
இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இந்த போட்டி டிசம்பர் மாத இறுதி வரை நடக்க இருக்கிறது.

நேற்று கொல்கத்தாவில் நடத்த முதல் நாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. கே.எல் ராகுல் டக் அவுட் ஆனார். தவான் 8 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார். கோஹ்லியும் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி சென்றார்.
இன்றும் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. ரஹானே, அஸ்வின் இருவரும் தலா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். புஜாரா நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
தற்போது இந்திய அணி 32.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் போட்டிக்கு இடையூறாக மீண்டும் மழை பெய்து வருகிறது. அங்கு பெய்யும் மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டு இருக்கிறது.