தம்புல்லா: டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி நடக்கவுள்ளது. அதில் கலந்து கொள்ளும் இலங்கை அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 20-ம் தேதி தம்புல்லாவில் நடக்கிறது. ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், ஆல்-ரவுண்டர்கள் திசரா பெரேரா, மிலின்டா ஸ்ரீவர்த்தனா ஆகியோர் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.
டெஸ்ட் தொடரில் ஆடிய புஷ்பகுமாரா, விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் முதல் முறையாக ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியில் இடம் பெற்றுள்ளவர்கள்:
உபுல்தரங்கா (கேப்டன்)
மேத்யூஸ்
நிரோஷன் டிக்வெல்லா
குணதிலகா
குசல் மென்டிஸ்
கபுகேதரா
ஸ்ரீவர்த்தனா
புஷ்பகுமாரா
அகிலா தனஞ்ஜெயா
லக்ஷன் சன்டகன்
திசரா பெரேரா
ஹசரங்கா
மலிங்கா,
சமீரா,
விஷ்வா
பெர்னாண்டோ