For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இதுவே போதும்பா.. நிறைய பார்த்துட்டேன்”.. இந்திய அணியில் தொடர்ந்து புறகணிப்பு.. ஷிகர் தவான் மனவேதனை!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரராக ஜொலித்து வந்த ஷிகர் தவான், தற்போது தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருவது குறித்து மனவேதனையுடன் பேசியுள்ளார்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2013ம் ஆண்டு முதல் ஐசிசி கோப்பையையே வெல்லாமல் உள்ள இந்திய அணி இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

இதற்கான திட்டங்களில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், ஹூடா, என பல இளம் வீரர்கள் சேர்ந்துள்ள சூழலில், இந்திய அணிக்காக நீண்ட வருடங்களாக உதவி வந்த ஷிகர் தவான் எங்கு சென்றார் என்ற அளவிற்கு மறைந்துவிட்டார்.

தவானின் இன்னிங்ஸ்

தவானின் இன்னிங்ஸ்

கடந்த 2022ம் ஆண்டில் இந்திய அணி 24 ஒருநாள் போட்டிகளை விளையாடியது. இதில் ஷிகர் தவான் 22 போட்டிகளில் விளையாடியிருந்தார். இந்தியாவின் முழு நேர கேப்டனான ரோகித் சர்மாவே 8 போட்டிளில் தான் வழிநடத்திய சூழலில், தவான் 9 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருந்தார். இந்த 22 போட்டிகளில் அவர் 688 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 34 ரன்களாக இருந்து.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

ஆனால் 2023ம் ஆண்டின் தொடக்கமே அவருக்கு சரிவாக உள்ளது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் திட்டத்தில் கூட ஷிகர் தவானின் பெயர் பரிந்துரைக்கப்படாமல் இருக்கிறது. இதற்கு காரணம் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவர் தான். எதிர்கால திட்டம் எனக்கூறி தவானை புறகணித்து வருகின்றனர். அதற்கேற்றார் போல, அவர்கள் இருவருமே ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து தங்களின் இடங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டனர்.

தவான் உருக்கம்

தவான் உருக்கம்

இந்நிலையில் இதுகுறித்து தவான் உருக்கமாக பேசியுள்ளார். "வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் வந்துக்கொண்டு தான் இருக்கு. அதனை எப்படி கையாள்வது என கற்க வேண்டும். எனக்கு நிறைய மன பலம் இருக்கிறது. நான் என்னால் முடிந்தவற்றை செய்துவிட்டேன். என்னை விட யாரேனும் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தால் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது.

இதுவே போதுமானவை

இதுவே போதுமானவை

அணிக்கு மீண்டும் வருவேனா என்பதை அதற்கான அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும். நான் எனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறேன். எனக்கான வாய்ப்பு வரும் என நம்பிக்கையுடன் உள்ளேன். அந்த நாள் வந்துவிட்டால் நல்லது. ஒருவேளை வரவில்லை என்றாலும் மகிழ்ச்சி தாம். நான் நிறைய சாதித்துவிட்டேன். அந்த மகிழ்ச்சியே கூட எனக்கு போதும். என்ன வந்தாலும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக தான் உள்ளேன் என தவான் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, February 15, 2023, 19:18 [IST]
Other articles published on Feb 15, 2023
English summary
Team India's Senior batsmen Shikhar dhawan's hard statement after not getting chances in ODI matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+