அந்த பவுலரை பார்த்தா தான் எனக்கு பயம்… யாரை சொல்றீங்க… அப்ரிடி?
இஸ்லாமாபாத்: தான் எதிர்கொண்டவர்களில் மெக்ராத் சிறந்த பவுலர் என்று பாகிஸ்தான் முன்னான் வீரர் சாகித் அப்ரிடி கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடியானவர் என்று பெயர் பெற்றவர் அப்ரிடி. அதிரடி பேட்டிங்கால், பூம் பூம் அப்ரிடி என்று அழைக்கப்படுகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 476 சிக்ஸர்கள் விளாசியயவர் என்ற பெருமை பெற்றிருப்பவர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த அப்ரிடியின் சாதனை 18 ஆண்டுகளுக்கு பிறகு தான் முறியடிக்கப்பட்டது.

2018 வரை விளையாடினார்
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் மிரட்டியவர் அப்ரிடி. 1996ம் ஆண்டிலிருந்து 2018ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் சர்வதேச போட்டிகளில் ஆடினார்.

பயந்தது இல்லை
2015ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2018ம் ஆண்டுவரை டி 20 போட்டிகளில் ஆடினார். தனது கிரிக்கெட் வாழ்வில் எந்த வீரருக்கும் பயந்ததே இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அப்ரிடி பேட்டி
இந்நிலையில், தற்போது அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மெக்ராத் தான் பெஸ்ட்
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தான், தான் எதிர்கொண்டதிலேயே மிகச்சிறந்த பாஸ்ட் பவுலர் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications