
பரபரப்பான போட்டி
இந்த போட்டி இரு அணிகளும் மோதும் ஒரு போர் போன்றே காட்சி தந்தது. ஏனென்றால் போட்டிக்கு முன்பாக பேசியிருந்த இலங்கை கேப்டன் ஷனகா, " வங்கதேச அணியில் ஷகிபுல் ஹசனை தவிர உலகத்தர பந்துவீச்சாளர்கள் இல்லை எனக்கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த வங்கதேச அணி, இலங்கை அணியில் நல்ல பேட்ஸ்மேன், பவுலர் என யாருமே கிடையாது எனக்கூறியிருந்தனர். இதனாலேயே இந்த போட்டி பரபரப்பாக நடந்தது.

நாகினி டேன்ஸ்
இந்நிலையில் இந்த பிரச்சினை, போட்டி முடிந்த பிறகு அடுத்தகட்டத்திற்கு சென்றது. இலங்கை அணி வெற்றி பெற்ற உடனே, டக் அவுட்டில் நின்றிருந்த அந்த அணியின் சக வீரர்கள் கொண்டாட, கருணரத்னே மட்டும் நாகினி நடனமாடி, வங்கதேச வீரர்களை வெறுப்பேற்றினார். வங்கதேச வீரர்கள், ஒரு அணியை வீழ்த்தினால் இந்த நடனம் ஆடி தான் கடுப்பேற்றுவார்கள். அதனை அவர்களுக்கே திருப்பி கொடுத்தனர்.

காரணம் என்ன
எனினும் கடுப்பேற்றியவர்கள் மீது துளியும் கோபம் காட்டாமல் வங்கதேச கேப்டன் ஷகிப் உல் ஹாசன் பேசியுள்ளார். போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், ஒரு சில ஓவர்களை சிறப்பாக வீசவில்லை என்பது தான் தோல்விக்கு காரணமானது. கடைசி ஓவரில் அவர்கள் 8 விக்கெட்களை இழந்திருந்தனர். எனினும் பவுலர்களின் சொதப்பலால் திட்டத்தை சரியாக செய்ய முடியவில்லை.

ஷனகாவுக்கு பாராட்டு
இலங்கை வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். குறிப்பாக தசுன் ஷனகா சிறப்பாக விளையாடினார். அவரின் சிறந்த ஆட்டம் தான் அனைத்தையும் மாற்றியது.
கடந்த 6 மாதங்களாக நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அடுத்ததாக டி20 உலகக்கோப்பை வரவுள்ளது. அதற்கு தற்போது இருந்தே தயாராக முயற்சிக்கிறோம் என ஷகிப் கூறினார். வஙக்தேச அணியில் நல்ல பவுலர்கள் இல்லை என விமர்சித்த ஷனகாவை ஷகிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











