For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்வன் படம் குறித்து பேசிய ஷகிபுல் ஹசன்.. எனக்கு பதவி கொடுங்கள்.. மாற்றி காட்டுகிறேன் என பேச்சு

டாக்கா : வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிபுல் ஹசன் அந்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் முறைகேடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். ஐபிஎல் போல் வங்கதேசத்திலும், வங்கதேச பிரீமியர் லீக் என்ற டி20 தொடர் நடைபெறுகிறது.

ஆனால் அது ரசிகர்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அந்த கிரிக்கெட் தொடரில் வீரர்களுக்கு பல பிரச்சனைகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷகிபுல் ஹசன் பிரச்சனைகளை தீர்க்க யாரும் விரும்பவில்லை என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஜெர்சி கூட இல்லை

ஜெர்சி கூட இல்லை

இது குறித்து பேசிய அவர் வங்கதேசத்தில் கிரிக்கெட் தான் பிரபலமான விளையாட்டு. கிராமத்தில் கூட கிரிக்கெட் தான் விளையாடுகிறார்கள். அப்படி இருக்க பிபிஎல் தொடருக்கு நாம் ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தாமல் விட்டு விட்டோம். வீரர்களை தேர்வு செய்யும் முறையை கூட நாம் சரியாக நடத்துவதில்லை. ஏன் போட்டியில் டிஆர்எஸ் முறை கூட இல்லை. நான் செய்திகளில் படித்தேன் ஏதோ ஒரு அணியின் ஜெர்ஸி தயாரிக்கும் பணி கூட இன்னும் முடிவடையவில்லை.

முதல்வன் படம்

முதல்வன் படம்

இது நிச்சயம் வங்கதேச பிரிமியர் லீக் எந்த அளவுக்கு மோசமாக நடத்தப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. என்னை இந்த லீகின் தலைவராக மாற்றுங்கள். நான் ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் அனைத்தையும் சரி செய்து விடுவேன். நீங்கள் நாயக் என்ற படத்தை ( முதல்வன் படத்தின் ஹிந்தி ரிமேக்) பார்த்து இருக்கிறீர்கள் தானே. அந்த படத்தில் வருவது போல், நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒரு நாளில் கூட செய்து விட முடியும்.

 அதிரடியாக மாற்றுவேன்

அதிரடியாக மாற்றுவேன்

நான் வங்கதேச பிரிமியர் லீக் சி இ ஓ அக பதவியேற்றால் வீரர்களுக்கு ஏலம் நடத்தும் முறையை சரியாக செய்வேன். முதலில் வங்கதேச பிரிமியர் லீக் தொடரை மற்ற லீக் போட்டிகளுடன் மோதும் வகையில் அனைத்து வீரர்களும் பங்கேற்கும் நேரத்தில் வைத்திருப்பேன். கிரிக்கெட்டில் இப்போது பல ஒளிபரப்பு தொழில்நுட்ப முறைகள் வந்துவிட்டது. ஆனால் வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் அப்படி எந்த முறையும் நான் காணவில்லை.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

முதலில் போட்டியை ஒளிபரப்பு முறையில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும். தற்போது தொடங்க உள்ள தொடரில் வெளிநாட்டு வீரர்கள் எத்தனை போட்டியில் பங்கேற்கிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு நிச்சயம் ரசிகர்களிடையே போய்விடும். பிபிஎல் தொடரில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குகிறது என்ற செய்தி மட்டும்தான் தெரியும். பயிற்சியைகூட நாங்களாக தான் செய்து வருகிறோம். போட்டி தொடங்கும் போது தான் என்ன நடக்கிறது என்று ஒரு அளவுக்கு தெரிய வரும்.

யாருமே பார்ப்பதில்லை

யாருமே பார்ப்பதில்லை

பிபிஎல் தொடரை எந்தெந்த நாடுகள் எல்லாம் ஒளிபரப்பு செய்கிறோம் என்று காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் யாரும் அந்த தொடரை பார்ப்பதில்லை. பாகிஸ்தான் பிரீமியர் லீக் ,கரீபியன் பிரீமியர் லீக் போன்ற தொடரில் விளையாடும் அறிமுக வீரர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு உடனே வழங்கப்படும். ஆனால் பிபி எல் தொடரில் அப்படி விளையாடினால் கூட அணியில் சேர்க்கப்படுவதில்லை. இப்படி ஒரு ஏமாற்றமான தொடரில் விளையாடினால் எப்படி வீரர்கள் முன்னேறுவார்கள் என்று ஷகிபுல் ஹசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Story first published: Thursday, January 5, 2023, 18:24 [IST]
Other articles published on Jan 5, 2023
English summary
Shakib al hasan refers shankar iconic movie in his press meet for cricket irregularities
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+