
வார்னே மறைவு
வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் இறப்பு இயற்கையானது தான் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வார்னேவின் அறை அருகில் 4 பெண்கள் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வார்னேவின் உடல் தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டது.

உடல் அடக்கம்
இதனைத் தொடர்ந்து வார்னேவின் இறுதிச் சடங்கு மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் வார்னேவின் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் என 80 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். வார்னே தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கிய செயின்ட் கில்டா அகாடமியிலேயே வார்னேவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கதறி அழுகை
வார்னேவின் உடல் அடங்கிய பெட்டியை அவரது நண்பர்கள்சுமந்து சென்றனர். அப்போது வார்னேவின் தாய் மற்றம் மகள் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதனர். வார்னே இறுதிச் சடங்கு நிகழும் போது அவருக்கு பிடித்த பாடலான தி டைம் ஆஃட்ப மை லைஃப் ஒலிக்கப்பட்டது. வார்னேவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது அவரது நண்பர் மெக்கியூர், நண்பர் வார்னேவுக்கு நீ சிறந்தவன் என்று மது பாட்டிலை உயர்த்தி அஞ்சலி செலுத்தினார்.

இறுதி ஊர்வலம்
வார்னேவின் இறுதி அஞ்சலியில் கிரிக்கெட் வீரர்கள் ஆலன் பார்டர், மைக்கில் கிளார்க், மெக்ராத், மார்க் டைலர், இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாஹன், மார்க் வாட்ஹக், இயான் ஹிலி அகியோர் பங்கேற்றனர். வார்னேவுக்கு விக்டோரியா அரசு சார்பாக வரும் 30ஆம் தேதி மெல்போர்னில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications











