
டிவிட்டரில் புகார்
இதனால் டெல்லியில் போட்டியை முடித்து விட்டு ஷர்துல் தாக்கூர் இன்று மும்பை வந்தடைந்தார். அப்போது, ஷர்துல் தாக்கூரின் லக்கேஜ் வந்து சேரவில்லை. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த ஷர்துல் தாக்கூருக்கு உதவ அங்கே எந்த அதிகாரியும் நிற்கவில்லை. இதனால் கடுப்பான ஷர்துல் தாக்கூர், டிவிட்டரில் புகார் அளித்தார்.

லக்கேஜ் வரவில்லை
அதில் மும்பை விமான நிலையத்தில் காத்து கொண்டு இருக்கிறேன். இன்னும் என்னுடைய கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் லக்கேஜ் வந்து சேரவில்லை. எப்போதும் மும்பையில் இந்த பிரச்சினையை நான் சந்திக்கிறேன். புகார் அளிக்க கூட ஒரு அதிகாரி இல்லை. உடனே ஒரு அதிகாரியை ஏர் இந்தியா அனுப்ப வேண்டும் என்று ஷர்துல் தாக்கூர் பதிவிட்டி இருந்தார்.

உதவிய ஹர்பஜன்
இதனை கண்டதும், ஹர்பஜன் சிங் டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறேன். உங்களுடைய உபகரணங்கள் விரைவில் உங்களை வந்து சேரும். உடனே எங்கள் ஊழியரை உதவிக்கு அனுப்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம், அவருக்கு ஏர் இந்தியாவில் கௌரவ பதவி வழங்கப்பட்டு இருந்தது.

ஆஸி பயணம்
இதனால், ஷர்துல் தாக்கூர் கொடுத்த புகாருக்கு ஹர்பஜன் சிங் உதவுவதாக முன் வந்தார். இதற்கு ஷர்துல் தாக்கூர் என் உடைமைகள் கிடைத்துவிட்டது. நன்றி பாஜி என்று குறிப்பிட்டுள்ளார். ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் நாளை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











