மும்பை: இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஷிவம் தூபே தனது குடும்பத்தினரைச் சந்திக்க அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு ரயிலில் புறப்பட்டார். விமானத்திற்காகக் காத்திருக்காமல், ரயிலில் சென்றது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் தந்துள்ளார். இடி20 உலககோப்பை தொடரில் சிவம் துபேவின் பேட்டிங் வேற லெவலில் இருந்தது.
முக்கியமான ஆட்டங்களில் குறிப்பாக அரையிறுதி, இறுதிப் போட்டியில் சிவம் துப அடித்த ரன்கள் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் டி20 உலககோப்பை வென்ற உடன் அணி வீரர்களுடன் நேரத்தை செவழிக்காமல், சிவம் துபே ரயிலில் புறப்பட்டு சென்றார்.

அது குறித்து விளக்கம் அளித்துள்ள சிவம் துபே, தந்தை மற்றும் குழந்தைகளைச் சந்திக்க தான் மிகுந்த ஆவலுடன் இருந்ததாக தூபே தெரிவித்தார். அவர் மனைவி மற்றும் நண்பருடன் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணித்தார்.

ஒரு நிகழ்வில், என் குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற பதற்றம் இருந்தது, என்னால் காத்திருக்க முடியவில்லை என்று தூபே குறிப்பிட்டார்.சிவம் துபே கவனத்தைத் தவிர்க்க, தூபே ரகசியமாகப் பயணிக்கத் திட்டமிட்டார். அதிகாலை 5:10 மணி ரயிலைத் தேர்ந்தெடுத்து, கடைசி நிமிடம் வரை காரிலேயே காத்திருந்தார். தொப்பி, முகமூடி, முழுக்கை சட்டை அணிந்து, மேல் படுக்கையில் ஓய்வெடுத்தார்.

இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும், ஒரு டிக்கெட் பரிசோதகர் அவரது படுக்கையைப் பார்த்து, "ஷிவம் தூபே? ஒரு கிரிக்கெட் வீரரா?" எனக் கேட்டார். அவரது மனைவி, "இல்லை, அவர் எப்படி இங்கு வருவார்?" என பதிலளித்து, டிக்கெட் பரிசோதகரை நம்பவைத்தார். இந்த நிலையில், சிவம் துபேவின் பேட்டிங் பார்ம் சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் ,இது போன்ற பேட்டிங்கை சிஎஸ்கேவில் வெளிப்படுத்தினால், 6வது கோப்பை உறுதி என்று சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.