இஸ்லாமாபாத்: மோக்கா மோக்கா என்று கிண்டல் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கை மன்னித்துவிட்டதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது.

இதையடுத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரை டேக் செய்து மோக்கா மோக்கா என்று ட்வீட் செய்தார். சேவாக்கின் ட்வீட்டை பார்த்த அக்தர் பதில் அளித்துள்ளார்.
அக்தர் தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,
எனது சகோதரர் வீரு கூறியதை எல்லாம் நான் மன்னித்துவிட்டேன். ஏனென்றால் அவருக்கு தங்கமான மனசு. அவர் ஜாலிக்காக கூறியிருப்பாரே தவிர வேறு எதுவாகவும் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.