
வேறு காலம்
மேலும் உலக அளவில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது ஆறாம் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி இன்னும் ஆறு ஆண்டுகள் விளையாடினால், சச்சின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி விளையாடிய காலம் வேறு? சச்சின் விளையாடிய காலம் வேறு என்றும் அதனை ஒப்பிட்டு பார்க்க கூடாது என்றும் பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர்.

பந்துவீச்சாளர்கள் தரம்
உதாரணத்திற்கு சச்சின் விளையாடிய காலத்தில் பில்டிங் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மேலும் இன்னிங்ஸ் முழுவதும் ஒரு பந்து வைத்து தான் விளையாடுவார்கள். ஆனால் தற்போது இரண்டு பந்துகள் ஒவ்வொரு முனைக்கும் பயன்படுத்தப்படுவதால் ஒருநாள் கிரிக்கெட்டில் சுலபமாக ரன் அடிக்க முடிகிறது. மேலும் பந்துவீச்சாளர்களின் தரமும் குறைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

தாண்டி இருக்க முடியாது
இது குறித்து பேசிய, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், விராட் கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன்.ஆனால் எங்கள் காலத்தில் சிறந்த பந்துவீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். விராட் கோலி மட்டும் எங்கள் காலத்தில் விளையாடி இருந்தால், அவரால் 30 ரன்களை கூட தாண்டி இருக்க முடியாது. சதங்களும் இவ்வளவு அடித்திருக்க முடியாது.

ரன்கள் கொடுத்திருக்க மாட்டார்கள்
எங்கள் காலத்தில் வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களெல்லாம் விராட் கோலிக்கு எதிராக ரன்களை கொடுத்து இருக்க மாட்டார்கள். இதனால் தான் சொல்கிறேன் எங்கள் காலத்தில் ஆடிக்கப்பட்ட சங்கங்கள் தான் சிறந்தது என்று சோயிப் அக்தர் கூறி இருக்கிறார். விராட் கோலி மற்றும் சோயிப் அக்தர் ஒரே ஒரு முறை ஆசிய கோப்பை 2010 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறார்கள். ஆனால் விராட் கோலி அந்த ஆட்டத்தில் முன்பே பெவிலியன் திரும்பியதால் சோயிப் அக்தர் அவருக்கு பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











