
சூர்யகுமார் யாதவ் அதிரடி
நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரே சொதப்பிய போதும், இந்தியாவை ஒரு நல்ல இலக்கிற்கு கொண்டு சென்றது சூர்யகுமார் யாதவ் தான். பவுலிங்கிற்கு சாதகமான பெர்த் மைதானத்தில் மற்ற வீரர்கள் திணறிய போதும், சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 40 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை விளாசினர்.

சோயிப் புகழாரம்
இந்நிலையில் சூர்யகுமாரின் ஆட்டத்தை பார்த்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் அசந்துப்போயுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னைப்பொறுத்தவரையில் சூர்யகுமார் தான் சிறந்த மிடில் ஆர்டர் டி20 பேட்ஸ்மேன். அவர் ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை நான் பார்த்ததே இல்லை. இக்கட்டான சூழலில், அதுபோன்ற டஃப் பவுலிங்கில், கடினமான பிட்ச்-ல் 170 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஒருவர் விளையாடுவது சாதாரணம் அல்ல.

வெற்றியின் ரகசியம்
சூர்யகுமார் பந்து எங்கு பிட்ச் ஆக போகிறது, பேட்டின் எந்த இடத்தில் அந்த பந்து படும் என்பது வரை நன்கு அறிந்து வைத்து ஆடுகிறார். அவரின் வெற்றிக்கு காரணம், ஒரே மாதிரியான ஆட்டம் தான். எப்படிப்பட்ட சூழல் வந்தாலும், அதே அதிரடியுடன் ஆடுகிறார். களத்தின் தன்மை, பவுலர்களின் மனநிலை ஆகியவையை நன்கு அறிந்துவைத்துள்ளார்.

டிவில்லியர்ஸின் திறமை
பவுலர்கள் அடுத்து எந்த பந்து போடப்போகிறார்கள்? ஆஃப் சைட்டா? லெக் சைட்டா? என்பதை ஏ.பி.டிவில்லியர்ஸ் நன்கு அறிந்து வைத்து ஆடுவார். அதே போன்று தான் தற்போது சூர்யகுமார் யாதவ் விளங்குகிறார் என சோயிப் மாலிக் புகழ்ந்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் சூர்யகுமாரை டிவில்லியர்ஸுடன் ஒப்பிடுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications