பெரிய இலக்கு அவசியம்
இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய இலக்கை நியூசிலாந்து நிர்ணயிக்க வேண்டும். அது தான் அணிக்கு பாதுகாப்பானது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பவுலிங், விளையாட முடியாத அளவுக்கு இருக்கிறது. பேட்ஸ் மேன்கள் திணறுகின்றனர்.
எச்சரிக்கை வேண்டும்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் குறைவான ரன்களை வழங்கி இருக்கிறார். எதிரணியின் எந்த வீரரையும் விடவில்லை. எனவே, நியூசிலாந்து அணியினர் பும்ரா பவுலிங் போடும் போது எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். டெத் ஓவர்களில் ஷமி நன்றாக பந்து வீசுகிறார். பேட்டிங்கிலும் இந்திய அணி வலுவாக இருக்கிறது.
தொடக்க விக். அவசியம்
எனவே, நியூசி. ஆக்ரோஷமான, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக வைக்க முடியும். இந்திய அணியின் தொடக்க வீரர்களை விரைவாக வீழ்த்திவிட வேண்டும். ஏன் என்றால் பேட்டிங்கின் ஆரம்பத்தில் நிதானமாகவும், பின்னர் அதிரடியாகவும் இந்திய அணியினர் ஆடுகின்றனர்.
ஐபிஎல் உதவும்
நமது அணி வீரர்கள் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் விளையாடி இருக்கின்றனர். அதிலும் போல்டுக்கு இந்திய அணியை பற்றி நன்றாக தெரியும். குறிப்பாக ஐபிஎல்லில் விளையாடிய போல்ட், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு இந்திய பேட்ஸ் மேன்களின் பலவீனம், பலம் தெரியும். ஆக்ரோஷ பந்துவீச்சு, விரைவான விக்கெட்டுகள், இதை செய்யாவிட்டால் அணிக்கு கஷ்டம் என்று கூறியிருக்கிறார்.
17 விக். வீழ்த்தியவர்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது 8 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரின் எக்னாமி ரேட் 4 ரன்கள் அளவில்தான் இருக்கிறது. அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தல் பவுலராக பும்ரா இருந்து வருகிறார்.