சாஹல் மனைவியும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஒரே அறையில்.. இன்ஸ்டாவில் தைரியமாக பதிவு.. கொந்தளித்த ரசிகர்கள்
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் மனைவி தனஸ்ரீயும், நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் காதலிப்பதாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு சர்ச்சைகள் வந்தது.
சக கிரிக்கெட் வீரரின் மனைவியை அபகரித்து திருமணம் செய்வது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. இப்படி ஒரு ஈனத்தனமான செயலை தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் சகவீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதேபோன்று இலங்கையிலும் தில்ஷானின் மனைவியை சக கிரிக்கெட் வீரர் தரங்கா அபகரித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடைபெறப் போகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் சாகல், தனுஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சாகலின் மனைவி தனுஸ்ரீ ஸ்ரேயாஸ் ஐயருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போல் அடிக்கடி புகைப்படங்கள் வெளியானது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும் தெரிய வந்தது. இதனால் சாகலும் மனமுடைந்து அண்மையில் சில பதிவுகளை போட்டு இருந்தார். அப்போது இதற்கு விளக்கம் அளித்த தனஸ்ரீ தமக்கும் சாகலுக்கும் காதல் இருப்பதாகவும் நாங்கள் கணவன் மனைவியாக தான் இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தனுஸ்ரீ ஸ்ரேயாஸ் போட்ட பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தனுஸ்ரீ மும்பையில் உள்ள அடுக்குமாடியை புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதே அடுக்குமாடியை அதே இடத்தில் இருந்து புகைப்படம் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயரும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இரண்டு கட்டிடமும் ஒரே மாதிரி இருக்கிறது என்று பார்த்தால் இருவரும் ஒரே இடத்தில் இருந்து தான் இந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். மேலும் தனுஸ்ரீ இந்த ஸ்டோரிக்கு cigrettes after sex என்ற பாடலை போட்டு இருக்கிறார். இது ரசிகர்களை மேலும் கோபமடைய செய்திருக்கிறது. சாகல் தனது மனைவியை விவகாரத்து செய்து விட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரேயாஸ் ஏன் இவ்வாறு கேடுகெட்ட வேலையில் ஈடுபடுகிறார் என்று பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications