ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த 23ம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் பீல்டிங் செய்த ஷ்ரேயாஸ் ஐயர், பவுண்டரிக்கு செல்லவிருந்த ஒரு பந்தை தடுக்க முயன்றபோது தடுமாறி கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் அடைந்தார்.
மாற்றுவீரர் சூர்யகுமார்
இதையடுத்து அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் விளையாடினார். இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் பலமாக உள்ள நிலையில் அவர் அடுத்ததாக ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சூர்யகுமார் ஆட்டம்
இந்நிலையில் அவருக்கு பதிலாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டம்
இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர், டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியாவில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து டி20 தொடர்களில் பங்கேற்பார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.