Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இது 200 ரன் அடிக்கும் பிட்ச்சே இல்லை".. படுதோல்வி அடைந்துவிட்டு புலம்பிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்

நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்த இந்திய அணி மிகவும் மோசமான கிரிக்கெட்டை விளையாடியதாகவும், இது 200 ரன்கள் அடிக்கும் பிட்ச் இல்லை எனவும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புலம்பி இருக்கிறார்.

நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, வெறும் 76 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ரன்கள் அடிப்படையில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இதனால் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

Shreyas Iyer Slams Poor Performance After Losing India vs England 3rd T20 Match

இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "இது முற்றிலும் அவமானகரமானது. இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோற்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் இந்தத் தோல்வியை நாம் ஒப்புக்கொண்டு, ஆரம்பத்தில் இருந்து மீண்டும் திட்டமிட வேண்டும். இது 200 ரன்கள் அடிக்கக் கூடிய பிட்ச் கிடையாது. பவர்பிளேயிலேயே 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக இழந்துவிட்டோம்" என்று வேதனையுடன் கூறினார்.

மேலும் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், "மைதானத்திற்கு வந்ததும் பேட்ஸ்மேன்கள் சூழலுக்கு ஏற்ப விளையாடி, பந்துவீச்சாளர்களின் லென்த்தைக் கணிக்க வேண்டும். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் கடினமான லென்த் அவர்களுக்குக் கைகொடுத்தது. ஆனால், எங்களிடம் சரியான திட்டமிடலும், அதைச் செயல்படுத்தும் திறனும் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் மிகவும் மோசமான கிரிக்கெட்டை விளையாடினோம். ஆனால், இதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன" என்றார்.

IND vs ENG: இந்திய டி20 வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. பெரும் அவமானத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் அணி

IND vs ENG: இந்திய டி20 வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. பெரும் அவமானத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் அணி

"ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் தங்களது பொறுப்பை உணர்ந்து, அணியில் தாக்கத்தை ஏற்படுத்த வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். மீண்டெழுந்து வர எங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார். இந்தத் தோல்வியின் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் தொடர்ந்து 5 போட்டிகளில் ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் இந்தியா தனது மிக மோசமான சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இந்தியா - இங்கிலாந்து போட்டியில் தோனி.. ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இந்தியா - இங்கிலாந்து போட்டியில் தோனி.. ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு
Story first published: Wednesday, July 8, 2026, 6:20 [IST]
Other articles published on Jul 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+