
கவனம் செலுத்து
மேலும் தம்மை தொடர்பு கொள்ள 15, 16 முறை மிஸ் கால் கொடுத்ததாகவும் ஊர்வசி ரவ்தெலா கூறினார். அந்த கிரிக்கெட் வீரர் பெயர் மிஸ்டர் ஆர்பி என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த ரிஷப் பண்ட் சிலர் வீண் விளம்பரத்திற்காக இப்படி பொய் சொல்லி திரிவதாக பதிலடி கொடுத்திருந்தார்.இதனால் கடுப்பான ஊர்வசி சின்னத்தம்பி கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

இதயத்தை தேடி
நான் அமைதியாக இருப்பதால் என்னை சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட, இருவருக்கும் இடையேயான பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் சில காலத்திற்குப் பிறகு ரிஷப் பண்டிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக ஊர்வசி ரவ்தெலா பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.அதன் பிறகு ரிஷப் பண்ட், டி20 உலக கோப்பை தொடர்பாக ஆஸ்திரேலியா சென்ற நிலையில் தாமும் தனது இதயத்தை தேடி ஆஸ்திரேலியா செல்வதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் .

ரசிகர்கள் கிண்டல்
இதனால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறி ரசிகர்கள் ரிஷப் பண்டை வெளிப்படையாக கிண்டல் செய்து வந்தனர். தற்போது இந்த விவகாரம் குறித்து சக இந்திய அணி வீரர் சுப்மான் கில்லிடம் கேள்வி எழுப்பப்பட்டது.ரிஷப் பண்டின் விவகாரம் குறித்து சக வீரர்கள் என்ன சொன்னீர்கள்? ட்ரெஸ்ஸிங் ரூமில் அதைப் பற்றி விவாதித்தீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுப்மான் கில், இந்த விவகாரத்தில் ரிஷப் பண்ட்க்கு எவ்வித சம்பந்தமே இல்லை.

தவறு இல்லை
ரவ்தெலா ரிஷப் பண்டின் கவனத்தை சிதறும் வகையில் நடந்து கொண்டார். ஆனால் பண்ட், அது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. எனக்கு தெரிந்து அவரைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக ஊர்வசி ரவ்தெலா இப்படி செய்திருக்கலாம் என்று வெளிப்படையாக கூறினார். தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய சுப்மான் கில், நான் தற்போது பாலிவுட் நடிகை சாரா அலிகான் உடன் டேட்டிங் செய்வதாக கூறியுள்ளார். தற்போது சுப்மான் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்காக விளையாடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











