For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. உலகக்கோப்பையில் இந்திய தொடக்க வீரர் இவர்தான்.. யுவராஜ் சிங் நம்பிக்கை

மும்பை: வரும் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக சுப்மன் கில் இருப்பார் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இளம் வீரர் சுப்மன் கில் வளர்ந்து வருகிறார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மண்ணில் சுப்மன் கில் செயல்பாடுகள் அனைவரையும் வியக்க வைத்தது.

தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்பிலும் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 70.88 சராசரியுடன் 638 ரன்கள் குவித்துள்ளார்.

ஷிகர் தவானா? சுப்மான் கில்லா? 2023 உலககோப்பையில் தொடக்க வீரர் யார்? கவாஸ்கர் ஷிகர் தவானா? சுப்மான் கில்லா? 2023 உலககோப்பையில் தொடக்க வீரர் யார்? கவாஸ்கர்

வாய்ப்பு வழங்கவில்லை

வாய்ப்பு வழங்கவில்லை

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அரைசதங்கள் விளாசியும், வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணி நிர்வாகம் மீது ரசிகர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டது. பின்னர் அனுபவ வீரர்கள் வருகையால் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பார்க்கப்பட்டது.

சுப்மன் கில் திறமை

சுப்மன் கில் திறமை

இந்த நிலையில் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக சுப்மன் கில் இருப்பார் என்று யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில், சுப்மன் கில் அதிக திறமையுள்ள வீரர். தொடர் பயிற்சியின் மூலம் கில் தனது திறமைகளை வளர்த்துள்ளார்.

தொடக்க வீரர் சுப்மன் கில்

தொடக்க வீரர் சுப்மன் கில்

தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் அடுத்த 10 ஆண்டுகளில் சுப்மன் கில் ஜாம்பவான் வீரராக இருப்பார் என்று நம்புகிறேன். அதேபோல் 2023ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக கில் இருப்பார். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. ஆனால் நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு என்னால் பங்களிக்க முடியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங் - சுப்மன் கில்

யுவராஜ் சிங் - சுப்மன் கில்

கொரோனா வைரஸ் பரவலின் போது இந்திய இளம் வீரர்களான சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு யுவராஜ் சிங் தன் வீட்டிலேயே தங்க வைத்து பயிற்சியளித்தார். ஆஸ்திரேலியாவில் சிறப்பாக பேட்டிங் செய்ததற்கு யுவராஜ் சிங் உடனான பவுன்சர் பந்து பயிற்சியே என்று சுப்மன் கில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 5, 2022, 22:39 [IST]
Other articles published on Dec 5, 2022
English summary
Former player Yuvraj Singh has expressed confidence that Subman Gill will be the opener of the Indian team in the upcoming World Cup series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X