சென்னை: திறமையான சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதற்காக இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் சென்னையில் பயிற்சி அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ட்ரோம் அமைப்பு சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த அகாடமியில், சிவராமகிருஷ்ணன் தலைவராக செயல்படுவார்.

அவர் கூறுகையில், இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளர்கள் குறைந்துவிட்டனர். அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோருக்கு பிறகு உள்நாட்டு கிரிக்கெட்டில், சிறப்பாக ஸ்பின் செய்யக்கூடிய பவுலர்கள் வேறு யாருமில்லை.
டெஸ்ட் போட்டிகளை வென்று தரும் வவகையிலான வகையிலான வீரர்களை உருவாக்குவதே இப்பயிற்சி மையத்தின் நோக்ககம். டி20 போட்டிகளுக்கான ஸ்பின்னர்களை உருவாக்குவது நோக்கமில்லை.
டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர், வேறு எந்த வகையான போட்டிகளிலும் ஆட கூடிய திறன் உள்ளவராக இருப்பார். ஆனால், டி20 பவுலரால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆட முடியாது.
நமக்கு கிரிக்கெட்டுக்கு தேவவையான நல்ல வசதிகள் உள்ளன அதை பயன்டுத்துவது அகாடமியின் நோக்கம். இவ்வாறு சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.