டாசில் தோற்றது
வழக்கம் போல்... ஏகோபித்த எதிர்பார்ப்புகளுடன் போட்டி தொடங்கியது. டாசில் தோற்றது இந்தியா. அதற்கு பலன் பவுலிங். முதலில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா வெளுக்க போகிறது என்று தான் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
பவுலிங் யூனிட்
ஆனால்.... நடந்த கதையே வேறு. இந்திய பவுலிங் யூனிட் தென் ஆப்ரிக்காவின் பேட்டிங்கையே ஒட்டு மொத்தமாக சாய்த்தது. அதனை தொடங்கி வைத்தது டெத் பவுலர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா.
முதல் விக்கெட் விழுந்தது
அவர் தொடங்கி வைத்ததை அருமையாக பிடித்துக் கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர் அடுத்து வந்த பவுலர்கள். அதில், கேப்டன் கோலியின் கேப்டன்சி ஒரு இடத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதல் விக்கெட் விழுந்ததும் தான் அவரின் மூவ் தெரிந்தது.
களத்தில் ஸ்லிப்பர்கள்
உடனடியாக அடுத்த விக்கெட்டை வீழ்த்தினால்.. எதிரணியின் தன்னம்பிக்கையை குலைத்து விட முடியும். 6வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது களத்தில் 2 ஸ்லிப் பீல்டர்கள் தான் நிறுத்தப்பட்டிருந்தனர்.
திட்டம் மாற்றம்
பும்ரா மீண்டும் பந்துவீசும் போது, பீல்டிங் திட்டத்தை மாற்றினார் கோலி. 3வது பந்தை வீசும் போது அதை செயல்படுத்தினார். ஸ்லிப்பில் 2 பேருக்கு பதில் 3 பேரை நிற்க வைத்தார். அதாவது அவரே நின்றார்.
2015ம் ஆண்டிலும் இப்படி தான்
சரியாக அதே இடத்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக். இப்போது மட்டுமல்ல... 2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போதும் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டி காக். இது தான் கேப்டன்சி... சூப்பர் கோலி. இதை தான் தாதா சவுரவ் கங்குலி சுட்டிக்காட்டி பிரமாதமாக பாராட்டி இருக்கிறார்.