
முதல் டெஸ்ட் போட்டி
இதனால் 130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 191 ரன்கள் அடித்ததன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு மொத்தம் 305 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணி 191 ரன்களுக்கு சுருண்டதால் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன் மூலம் செஞ்சூரியன் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

கோலி பாராட்டு
இந்த வரலாற்று வெற்றி குறித்து பேசியுள்ள விராட் கோலி, இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் இந்திய அணியின் சிறப்பாக அமைந்தது. இந்த போட்டியில் மட்டுமல்ல கடந்த 2 ஆண்டுகளாகவே அவர்களின் பவுலிங் கூட்டணி, மிகச்சிறப்பான இந்திய அணியை கட்டமைத்துள்ளது.

பேட்டிங் வரிசை
அயல்நாட்டு களங்களில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது என்பது கடினமான ஒன்று. ஆனால் எதையுமே கருதாமல் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் நல்ல தொடக்கம் கொடுத்தனர். நாங்கள் 300 - 320 ரன்கள் வரை தான் சேர்ப்போம் எனத் தெரியும். எனினும் எங்களின் பவுலிங் யூனிட் மீது அதீத நம்பிக்கை இருந்தது. அதன்படியே செய்து கொடுத்தனர்.

உணர முடியும்
மழையின் காரணமாக ஒருநாள் ஆட்டம் முழுவதுமே ரத்தானது. இதனை நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் இந்திய அணி எப்படி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதை உணர முடியும். இந்த வெற்றியால் அடுத்த போட்டிக்கும் நல்ல நம்பிக்கை கிடைத்துள்ளது என விராட் கோலி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











