ஐசிசி டி20 உலககோப்பை 2026 தொடரில் ஆஸ்திரேலியா அணி இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டு ஓவர்கள் எஞ்சியிருக்க, இலங்கை இப்போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கான தனது இடத்தை உறுதி செய்தது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், தங்கள் அணி சிறப்பாக விளையாடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியதால், தொடரை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. தோல்விக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், "இது ஒரு சவாலான இலக்கு என்று நான் நினைத்தேன்."

"நாங்கள் ஆட்டத்தைத் தொடங்கிய விதத்தை பார்த்தால், சில ரன்கள் குறைவாகவே எடுத்துவிட்டோம். இலங்கை அணி சிறப்பாக விளையாடி, எங்களை இன்று மிஞ்சிவிட்டது. எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது பெரிய ஸ்கோர்களை எடுக்க முடியும் என்பது தெரியும். ஆனால், கடைசிப் பகுதியில் நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம்".
"இலங்கை வீரர்கள் கடைசி ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசினர். நாங்கள் சில ரன்கள் குறைவாகவே இருந்தோம். இலங்கை எங்களை மிஞ்சிவிட்டது என்பதைத் தவிர வேறு சொல்ல ஒன்றும் இல்லை. இப்போது நாங்கள் மற்ற அணிகளின் முடிவுகளை சார்ந்துள்ளோம்"
"இந்த அறையில் இப்போது பல உணர்வுகள் கொந்தளிக்கின்றன. நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தற்போது நாங்கள் அனைவரும் ஏமாற்றமடைந்த குழுவினராக இருக்கிறோம். நாயின் மடியில் தற்போது இருக்கிறோம். ஜிம்பாப்வே போட்டியை நாங்கள் ஒரு அணியாக நம்பிக்கையுடன் பார்க்க தயாராகி வருகிறோம். "
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மெல்லிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலியா தகுதிபெற, ஜிம்பாப்வே அதன் அடுத்த இரண்டு போட்டிகளான பிப்ரவரி 17 (அயர்லாந்து) மற்றும் பிப்ரவரி 19 (இலங்கை) இரண்டிலும் தோற்க வேண்டும்.அயர்லாந்து, ஜிம்பாப்வேயை வீழ்த்தினால், ஆஸ்திரேலியா பிப்ரவரி 20 அன்று ஓமானை வீழ்த்தி நான்கு புள்ளிகளைப் பெற வேண்டும். அத்துடன், அயர்லாந்தின் நிகர ரன் ரேட்டை (+0.150) முந்த, கணிசமான ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் (தற்போது ஆஸ்திரேலியாவின் நிகர ரன் ரேட் +0.414).