தம்புல்லா : தென்னாபிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.
நேற்று தம்புல்லாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 244 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் டிக்வெல்லா 69 ரன்களும்,கேப்டன் ஏஞ்சலோ மத்தியூஸ் 79 ரன்களையும் எடுத்தனர். தென்னாபிரிக்கா தரப்பில் நிகிடி மற்றும் பெழுகுவாயோ தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.