
இரு மடங்கு அதிகம்
மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை 3 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து பெங்களூரு அணி ஏலத்தில் வாங்கியது. இதன் மூலம் ஸ்மிருதி மந்தனா ஒரே நாளில் கோடீஸ்வரியாக மாறிவிட்டார். இது மட்டுமல்ல, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பாபர் அசாம் வாங்கும் ஊதியத்தை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

பிக் பேஷ் லீக்
பாபர் அசாம் 2023 பிஎஸ்எல் தொடரில் ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஸ் லீக் தொடரில் 2 கோடியே 13 லட்சம் ரூபாய் வாங்கும் டார்சி ஷார்ட் தான் அதிக சம்பளம் வாங்கும் வீரர் ஆவார். அவரை விட ஸ்மிருதி மந்தனா தற்போது அதிக சம்பளம் வாங்கி உள்ளார்.

ஆஷ்லி கார்ட்னர்
இதே போன்று பிக் பேஸ் லீக் தொடரில் அதிக ஊதியம் வாங்கும் ஆடவர்களை விட மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் கார்டனரும், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட்சிவரும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.

நிலைமை மாறியது
இது , மீண்டும் பிக் பேஷ் தொடரில் அதிக விலைக்கு சென்ற ஆடவர்களை விட தற்போது ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள். ஆஸ்திரேலிய வீராங்கனைளுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு 3 கோடி ரூபாய் வருமானத்தை 10 பேர் பிரித்து கொண்டனர். ஆனால் ஆஷ்லிக் கார்ட்னர், அந்த மொத்த தொகையை விட அதிக சம்பளம் பெற்றுள்ளதாக ஆஸ்திரலிய ஊடகங்கள் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











