
பாதி சுயசரிதை
கங்குலி 'A century is not enough' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதுகிறார். இதை சுயசரிதை என்று சொல்லி விட முடியாது. இருப்பினும் ஒரு விளையாட்டு வீரர் சந்திக்கும் சவால்கள் குறித்து இதில் விளக்கியுள்ளார் கங்குலி. தனது சொந்த அனுபவங்களையும் இதில் கூறியுள்ளார். பத்திரிகையாளர் கெளதம் பட்டசார்யாவுடன் இணைந்து இதை எழுதுகிறார் கங்குலி. அடுத்த ஆண்டு இது வெளியாகும்.

இதுவரை வாய்ப்பு வரவில்லை
புத்தகத்தின் பெயரை கொல்கத்தாவில் நடந்த விழாவில் அறிவித்தார் கங்குலி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை நான் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் அமரும் வாய்ப்பு எனக்கு வரவில்லை. எதிர்காலத்தில் உட்கார்ந்தாலும் உட்காரலாம். இல்லை என்று மறுக்க முடியாது.

20 வருடத்திற்கு முன்பு
இந்திய அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்வது என்பது மகத்தானது. 20 வருடத்திற்கு முன்பு நான் முதல் முறையாக நாட்டுக்காக ஆடினேன். இப்போது நாட்டுக்காக ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பொறுப்பில் உள்ளேன்.

2005ல் குழப்பம்
2005ம் ஆண்டில் பயிற்சியாளர் விவகாரத்தில் குழப்பம் நேரிட்டது (கிரேக் சேப்பல் நியமனத்தைச் சொல்கிறார் - அப்போது கங்குலிதான் கேப்டன்). இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் இது சரியாக அமையும்.

எனக்கே ஆசை இருந்தது
நேர்மையாகச் சொன்னால் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எனக்கே கூட அந்த சிந்தனை இருந்தது. ஆனால் இப்போது நானே ஒருவரைத் தேர்வு செய்கிறேன். சச்சின், லட்சுமண், பிசிசிஐ செயலாளர் ஆகியோரின் உதவியுடன். சரியான நபரைத் தேர்ந்தெடுப்போம் என்று நம்புகிறேன் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications