
கோலி சதம்
இந்த போட்டியை தாண்டி விராட் கோலியின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு கம்பேக் கொடுத்த விராட் கோலி, ஆண்டின் கடைசி போட்டியாக வங்கதேசத்துடன் சதமடித்திருந்தார். தற்போது 2023ன் முதல் போட்டியையும் சதத்துடன் தொடங்கிவிட்டார். கோலி இன்னும் 4 சதங்களை மட்டும் அடித்துவிட்டால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ( 49 சதங்கள் ) சச்சினை சமன் செய்துவிடுவார்.

கிளம்பிய விவாதம்
இதனால் சச்சின் டெண்டுல்கரை விட சிறப்பாக விளையாடி முந்திவிடுவாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசியிருந்த கம்பீர், 200 சதங்களை அடித்தாலும் கோலி சச்சினாக முடியாது. அப்போது இருந்த விதிமுறை வேறு, இப்போது உள்ளது வேறு என விமர்சித்தார். இதற்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் தக்க பதிலடி கொடுத்திருந்தார். சச்சினை போல ஓப்பனிங் ஆடாமல், 3வது வீரராக விளையாடியே சாதித்துவிட்டார் எனக் கூறியிருந்தார்.

கங்குலியின் ஆதரவு
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சவுரவ் கங்குலி குரல் எழுப்பியுள்ளார். அதில், சச்சினை கோலி முந்திவிடுவார, அவரை விட சிறந்தவரா என்ற கேள்வியே கடினமான ஒன்று. விராட் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். இந்திய அணி பல கடினமான சூழல்களில் சிக்கிய போதெல்லாம் விராட் கோலி தனி நபராக போராடி வென்றுக்கொடுத்துள்ளார். 45 சதங்கள் என்பது சாதாரணமாக வந்துவிடாது.

ஃபார்மில் இல்லை
சில வருடங்கள் விராட் கோலிக்கு சரியாக அமையாதது உண்மை தான். சரிவர ரன் குவிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ஸ்பெஷலான வீரர். என்றுமே அவருக்கான பெருமைகள் இருக்கத்தான் செய்யும் என கங்குலி ஆதரவு கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளையும் எடுத்துக்கொண்டால் சச்சின் 100 சதங்களை அடித்துள்ள சூழலில் விராட் கோலி 74 சதங்களை அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications