
நீக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா
ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவரது காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய காயத்தை கவனத்தில் கொண்டு ஐபிஎல் அணியில் மீண்டும் இணைவது குறித்து அவர் முடிவெடுக்க வேண்டும் என்று சமீபத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

திறமை இல்லையா?
இந்நிலையில் தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி மற்றும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் ஆகியோரை தங்களது நிலைப்பாடுகள் குறித்து பேசவிடாமல் அவர்கள் சார்பில் சவுரவ் கங்குலியே பேசி வருவதாக முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் தொவித்துள்ளார். அவர்களுக்கு விளக்கம் அளிக்க போதிய திறமை இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலையில் சுமக்கிறார் கங்குலி
தனக்கு அவர்களை காட்டிலும் அதிக திறமை உள்ளதாக கங்குலி கருதுகிறாரா என்றும் கேட்டுள்ளார் வெங்சர்க்கார். தன்னுடைய தலையில் அனைத்து பொறுப்புகளையும் கங்குலி போட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏன் 'X' நீக்கப்பட்டார், 'Y' ஏன் தேர்ந்தெடுக்கப்பட வில்லை என்று விளக்கங்களை அளித்து வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

கங்குலி அறிவிப்பு
ஐபிஎல் நடைபெறும் இடங்கள் உள்ளிட்டவை குறித்தும் கங்குலியே அறிவித்ததையும் வெங்சர்க்கார் குறிப்பிட்டுள்ளார். எப்போதுமே முன்னாள் வீரர்கள்தான் அணியை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் தான் என்றும் அது தற்போது மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?
பிசிசிஐ பிசியோ ரோகித் பிட்டாக இல்லை என்று கூறியுள்ளதாகவும் ஆனால் ஐபிஎல் பிசியோ அவர் விளையாட அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள வெங்சர்க்கார், ஏன் இந்த முரண்பாடு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அணியை தேர்வாளர்கள் அல்லது பிசிசிஐ நிர்வாகிகள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











