Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்றரை நாளில் 34 விக்கெட்டுகள்.. இதுபோன்ற ஆடுகளத்தை வாழ்நாளில் பார்த்ததில்லை.. புலம்பிய டீன் எல்கர்!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் ஒன்றரை நாட்களில் 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதை ஏற்க முடியவில்லை என்று டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஒன்றரை நாளுக்குள் முடிந்து விட்டது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் வெறும் 144.2 ஓவர்கள் தான் வீசப்பட்டது.அதில் 34 விக்கெட்டுகள் பந்து வீச்சாளர்களால் எடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாகிஸ்தான் போன்ற நாடுகள் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் அமைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஆஸ்திரேலியா அமைத்த ஆடுகளத்தால் போட்டி ஒன்றரை நாளுக்குள் முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

டீன் எல்கர் கருத்து

டீன் எல்கர் கருத்து

இதுகுறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் பேசுகையில், காபா பிட்ச் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது குறித்து நடுவர்களிடம் பேசினேன். இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது. பழைய பந்து கூட நன்றாக பவுன்ஸ் ஆவதை ஏற்க முடியவில்லை. இதுபோன்ற பிட்ச்களும், ஆடுகளமும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்படி சிறந்த விளம்பரமாக அமையும்.

இதுபோல் பார்த்ததில்லை

இதுபோல் பார்த்ததில்லை

ஒன்றரை 34 விக்கெட்டுகள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது இரண்டு நாட்களில் என்ன நடந்தது என்று கூட எனக்கு புரியவில்லை. போட்டி ஆரம்பிப்பதற்குள் முடிந்து விட்டது என் வாழ்வில் இந்த மாதிரி ஒரு ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.

 கம்மின்ஸ் கருத்து

கம்மின்ஸ் கருத்து

தொடர்ந்து ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், தென்னாப்பிரிக்கா கேப்டன் கம்மின்ஸ் கூறியது பாதுகாப்பற்ற நிலையில் பிட்ச் இல்லை. அதேபோல் பழைய பந்தில் பவுன்ஸ் ஆகவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டி ஒன்றரை நாட்களில் முடிவடைந்துள்ளது. இதற்கு, பிட்சினை தயார் செய்தவர்களின் தவறா என்பது குறித்து தனிப்பட்ட முறையில் கவலையில்லை என்று தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டி - காபா

ராவல்பிண்டி - காபா

சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தயார் செய்திருந்த ராவல்பிண்டி பிட்ச்சினை ஐசிசி கடுமையாக கண்டித்திருந்தது. ராவல்பிண்டி பிட்ச்சிற்கு நெகடிவ் புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் காபா பிட்ச்சிற்கும் ஐசிசி நெகட்டிவ் புள்ளிகள் வழங்குமா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Story first published: Sunday, December 18, 2022, 19:51 [IST]
Other articles published on Dec 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+