
டீன் எல்கர் கருத்து
இதுகுறித்து தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் பேசுகையில், காபா பிட்ச் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது குறித்து நடுவர்களிடம் பேசினேன். இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது. பழைய பந்து கூட நன்றாக பவுன்ஸ் ஆவதை ஏற்க முடியவில்லை. இதுபோன்ற பிட்ச்களும், ஆடுகளமும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்படி சிறந்த விளம்பரமாக அமையும்.

இதுபோல் பார்த்ததில்லை
ஒன்றரை 34 விக்கெட்டுகள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது இரண்டு நாட்களில் என்ன நடந்தது என்று கூட எனக்கு புரியவில்லை. போட்டி ஆரம்பிப்பதற்குள் முடிந்து விட்டது என் வாழ்வில் இந்த மாதிரி ஒரு ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.

கம்மின்ஸ் கருத்து
தொடர்ந்து ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பேசுகையில், தென்னாப்பிரிக்கா கேப்டன் கம்மின்ஸ் கூறியது பாதுகாப்பற்ற நிலையில் பிட்ச் இல்லை. அதேபோல் பழைய பந்தில் பவுன்ஸ் ஆகவில்லை. ஆனால் டெஸ்ட் போட்டி ஒன்றரை நாட்களில் முடிவடைந்துள்ளது. இதற்கு, பிட்சினை தயார் செய்தவர்களின் தவறா என்பது குறித்து தனிப்பட்ட முறையில் கவலையில்லை என்று தெரிவித்துள்ளார்.

ராவல்பிண்டி - காபா
சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தயார் செய்திருந்த ராவல்பிண்டி பிட்ச்சினை ஐசிசி கடுமையாக கண்டித்திருந்தது. ராவல்பிண்டி பிட்ச்சிற்கு நெகடிவ் புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் காபா பிட்ச்சிற்கும் ஐசிசி நெகட்டிவ் புள்ளிகள் வழங்குமா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











