ஓய்வு
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் இருந்து கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. கோஹ்லி கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து ஒரு மாதம் ஒய்வு கேட்டு இருந்தார். இதையடுத்து பிசிசிஐ அவருக்கு ஓய்வு அளித்தது. இனி அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடக்கும் கிரிக்கெட் தொடரில் விளையாடவே இந்திய அணிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.
திருமணம்
இந்த நிலையில் கோஹ்லியின் இந்த விடுமுறை அவரது கல்யாணத்திற்காகத்தான் என்று கூறப்பட்டது. கோஹ்லியும், அனுஷ்காவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது. மேலும் இத்தாலியில் மிகவும் பெரிய அளவில் திருமணம் நடக்கும், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
உண்மை என்ன
தற்போது இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து கோஹ்லியின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் "கோஹ்லிக்கு திருமணம் நடக்க போவதாக வந்த செய்திகளில் துளி கூட உண்மை இல்லை. அவர் உடல் ஓய்விற்காகவே விடுமுறை கேட்டு இருந்தார். அவர் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ஓய்வின்றி விளையாடிக் கொண்டு இருக்கிறார்'' என்று குறிப்பிட்டார்.
டிசம்பர் ராசி
கோஹ்லிக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நடக்கும் என்று இதற்கு முன்பே செய்திகள் பரப்பப்பட்டது. சென்ற வருடம் டிசம்பர் மாதம் இதே போல செய்திகள் வெளியானது . அப்போது தான் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் நிறைய வெளிவந்தது. தற்போது அதேபோல் இந்த டிசம்பர் மாதமும் செய்திகள் வெளிவந்துள்ளது.