
சாம்பியனாக அடியெடுத்து வைக்கும் இந்தியா
இந்திய கிரிக்கெட் அணி இப்போட்டிக்குள் நடப்புச் சாம்பியனாக அடியெடுத்து வைக்கிறது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு
23 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவை இணைந்து உலகக் கோப்பைப் போட்டியை நடத்துகின்றன.

கடைசியாக 1992ல்
கடைசியாக இந்த இரு நாடுகளும் இணைந்து 1992ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை நடத்தின.

பிப்ரவரி 14 முதல் மார்ச் 29 வரை
2015 உலகக் கோப்பைப் போட்டிகள் பிப்ரவரி 14ம் தேதி தொடங்கி மார்ச் 29ம் தேதி வரை நடைபெறும்.

14 அணிகள்
மொத்தம் 14 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதில் 10 அணிகள் ஐசிசியின் முழு நேர உறுப்பினர்கள். மீதமுள்ள 4 அணிகளும் தகுதிப் போட்டியின் அடிப்படையில் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும்.

44 நாட்களில் 49 போட்டிகள்
44 நாட்கள் போட்டிகள் நடைபெறும். மொத்தம் 49 போட்டிகள் இடம் பெறும்.

2 பிரிவுகள்
ஏ மற்றும் பி பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 7 அணிகள் இடம் பெறும்.

14 இடங்களில் போட்டிகள்
இரு நாடுகளையும் சேர்ந்து 14 இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 7 இடங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளன. நியூசிலாந்தில் மீதமுள்ள 7 இடங்களும் உள்ளன.

இறுதிப் போட்டி மெல்போர்னில்
மெல்போர்ன் விளையாட்டு மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறும். 1992 இறுதிப் போட்டியும் கூட இங்குதான் நடந்தது.

அரை இறுதிகள்
ஆக்லாந்தில் ஒரு அரை இறுதிப் போட்டியும், சிட்னியில் இன்னொரு அரை இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications